தேவையானவை:
இறால் (உரித்தது) – 300 கிராம்,
பாசுமதி அரிசி – இரண்டரை கப்,
பச்சை மிளகாய் – 6,
தக்காளி – 6,
சின்ன வெங்காயம் – முக்கால் கப்,
புதினா, மல்லித்தழை – தலா 1 கைப்பிடி,
இஞ்சி + பூண்டு விழுது – 3 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 2 கப்,
எலுமிச்சம்பழம் – 1,
எண்ணெய்– — அரை கப்,
நெய் – கால் கப்,
உப்பு – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பட்டை – 1,
லவங்கம் – 5,
ஏலக்காய் – 1,
பிரிஞ்சி இலை – சிறிது,
சோம்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு எல்லாவற்றையும் ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை அம்மியில் நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். (மிக்ஸியில் போடக்கூடாது). அம்மி இல்லாதவர்கள், பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். தக்காளியை மிக்ஸியில் அடித்து ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்தபிறகு, ஊறவைத்த தாளிக்கும் பொருட்களை தண்ணீரை வடிகட்டிவிட்டுப் போடுங்கள். நன்றாக பொரிந்தபிறகு, நசுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை போட்டு வதக்குங்கள். பிறகு நெய் விட்டு நன்றாக கிளறிவிட்டு, சுத்தம் செய்த இறாலைப் போட்டு, மஞ்சள்தூள் போட்டு நன்றாக கிளறி, இஞ்சி + பூண்டு விழுது சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வையுங்கள்.
பிறகு தக்காளி ஜூஸ், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கொதிக்கவையுங்கள். நன்றாக கொதிக்கும்போது அரிசியைப் போட்டு, எலுமிச்சம்பழச் சாறு விட்டு கிளறி தண்ணீர் வற்றிய பிறகு, மட்டன் பிரியாணிக்கு சொன்ன முறையில் ‘தம்’ போட்டால், பிரியாணி ‘பொலபொல’வென சுவையாக இருக்கும்.