- குடல் – ஒன்று
- வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி – 3
- பச்சைமிளகாய் – 4
- பூண்டு – 8 பல்
- இஞ்சி – அரை இன்ச் அளவு
- சோம்பு – ஒரு தேக்கரண்டி
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி
- மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி
- தேங்காய் – அரை மூடி
- புளி – பாக்களவு
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- பட்டை – ஒன்று
- கிராம்பு – ஒன்று
- இலை – சிறிது
- கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது
- குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும்.
- சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம்.
- சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெங்காயம் போட்டு அரைத்து குடலில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
- நன்கு வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து 4 நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி குழம்பில் போட்டு, புளியை ஊற்றி கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி வற்றியவுடன் இறக்கவும்